இந்த புத்தகம் சுஜாதாவால் பல காலகட்டத்தில் பல பத்திரிகைகளில் கடவுளை பற்றி எழுதிய தொகுப்பு. இதனாலயே கட்டுரைகளில் தொடர்ச்சி இல்லை. இருப்பினும் கடவுள் பற்றிய நம்முடைய பல கேள்விகளுக்கு ஆழமான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
- உலக மதங்கள் பற்றிய மேற்பார்வை மற்றும் அதன் ஒற்றுமை.
- கடவுள் இருக்கிறாரா?
- விஞ்ஞானம் கடவுளை பற்றி என்ன சொல்கிறது?
- இயற்கையின் படைப்புகள் அனைத்தும் கணித கோட்பாடுகள் தான?
- கடவுளை பார்த்தவர்களுடன் ஒரு நேர்காணல்
- இறந்த பிறகு எங்கே செல்கிறோம்?
- ஒரு முயலின் எண்ணப்படி கடவுள் எப்படி இருப்பார்?
- கடவுளை மனிதன் படைதான இல்லை மனிதனை கடவுள் படைத்தார?
இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு விஞ்ஞான முறைப்படி விளக்கி எழுதி இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரைகளிலும் நம்மாழ்வாருடைய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. படிக்க வேண்டிய புத்தகம்.
மொத்த பக்கங்கள்: 272
புத்தகத்தின் விலை: Rs.170
உயிர்மை பதிப்பகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment